வெள்ளத்தால் பாதித்த குடும்பத்திற்கு ரூ.10,000 நிவாரணம்! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.!!
Arvind Kejriwal announced Rs10000 relief fund for delhi flood affected family
டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் யமுனை நதி கரையில் வசித்து வரும் பல ஏழை குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பல குடும்பங்களின் வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். புத்தகங்கள் இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் மீண்டும் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். டெல்லி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும்" என அறிவித்துள்ளார்.
English Summary
Arvind Kejriwal announced Rs10000 relief fund for delhi flood affected family