தமிழக பெண்ணை கொலை செய்த ராணுவ அதிகாரி கைது.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள காமரூப் மாவட்டம் சாங்சாரி பகுதியில் கடந்த 15-ந் தேதி ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த வந்தனாஸ்ரீ என்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிர படுத்திய போலீசார் அவருடைய கொலைக்கு யார் காரணம்? என்று விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், கொலையின் பின்னணியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமரிந்தர் சிங் வாலியா என்ற ராணுவ அதிகாரி இருப்பது தெரியவந்தது. மேலும், அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூரில் ராணுவ மக்கள்தொடர்பு அலுவலராக பணியாற்றி வரும் இவருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாக தகாத உறவு இருந்துவந்ததும் தெரிய வந்தது. 

அதனால், வந்தனாஸ்ரீ ராணுவ அதிகாரியைப் பார்ப்பதற்காக கடந்த 14-ந் தேதி டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ராணுவ அதிகாரி அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், ராணுவ அதிகாரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

army man arrested for tamilnadu woman murder case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->