ஆந்திராவில் பரபரப்பு: நாட்டு வெடிகுண்டை கடித்து வாலிபர் தற்கொலை:
Andhra Pradesh Youth commits suicide biting country bomb
ஆந்திரா, சித்தூர் மாவட்டத்திலுள்ள காட்டம் வாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 35) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிரஞ்சீவி நேற்று மது அருந்தி போதையில் வீட்டில் இருந்த நாட்டு வெடிகொண்டை எடுத்து கடித்துள்ளார்.
அப்போது நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியதில் சிரஞ்சீவியின் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவு சென்று சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவிக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் நாட்டு வெடிகுண்டை கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Andhra Pradesh Youth commits suicide biting country bomb