சிக்கன் பிரியாணி... இப்போ பூரான் பிரியாணி! கதி கலங்கிய அசைவ பிரியர்கள்!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு சென்று சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். 

ஆர்டர் செய்த உணவு வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் பூரான் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம், பூரான் பிரியாணி சமைக்கிறீர்களா உங்கள் ஹோட்டலில் என கேள்வி எழுப்பினர். 

ஆனால் அவர்களின் கேள்விக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் உணவு தயாரிக்கும் சமையலறைக்குச் சென்று பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது. 

உடனடியாக இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. சிக்கன் பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra biryani at insect


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->