நாடு முழுவதும் நாளை முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு.!
All picnic spot no fees for from tomorrow
75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகின்ற நாளை (ஆகஸ்ட் 5ஆம் தேதி) முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அருங்காட்சியங்கள், நினைவு சின்னங்களை இலவசமாக மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
All picnic spot no fees for from tomorrow