ஏர் இந்தியா ஊழியர்களின் சர்ச்சையான கொண்டாட்டம்! 4 மூத்த அதிகாரிகள் பணிநீக்கம்!
Air india Staff calibration issue
ஏர் இந்தியா சரக்குத் துறை ஊழியர்களின் ஒரு கொண்டாட்ட விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இச்சம்பவம், ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி 270 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சில நாள்களிலேயே வெளியானது. விமானம் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது மோதி நொறுங்கிய இந்த பயங்கர விபத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாய்ஸல் பரவும் அந்த விடியோவில், ஏர் இந்தியாவின் சரக்குத் துறை ஊழியர்கள் சிலர் ஆடிப்பாடி மகிழ்ந்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவாகக் தெரியாத போதும், அது விபத்துக்குப் பிறகு எடுத்ததென்பது புலப்படுகிறது. இந்த கொண்டாட்டத்திற்குப் பின்னணி என்னவென்பதும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், ஊழியர்களின் நடத்தை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுத்து, 4 மூத்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், "விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தொடர்ந்து துணையாக இருக்கும்; சமீபத்திய விடியோவால் ஏற்பட்ட மனவெதுப்புக்கு வருந்துகிறோம். இது எங்கள் நிறுவனத்தின் நெறிமுறைகளைக் குறிக்காது. சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனவும் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
English Summary
Air india Staff calibration issue