'கனிஷ்கா'ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வெடிப்பு; சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள கனடா போலீசார்..!
Air India flight Kanishka bomb suspect identified dies
'கனிஷ்கா' ஏர் இந்தியா விமானம் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான சந்தேக நபரை கனடா போலீசார், 40 ஆண்டுக்கு பின் அடையாளம் கண்டுள்ளனர். இந்த விமானத்தில் இருந்த குண்டு வெடித்து சிதறியதில், 329 பேர் பலியாகினர்.
1985 ஜூன் 23-ஆம் தேதி அன்று வட அமெரிக்க நாடான கனடாவின் டொரான்டோவில் இருந்து மும்பைக்கு, கனிஷ்கா ஏர் இந்தியா விமானம்புறப்பட்டது. குறித்த விமானம் பிரிட்டனின் லண்டன் செல்லும் வழியில் அயர்லாந்து வான்பரப்பில் சென்றபோது, விமானத்தில் இருந்த குண்டுவெடித்தது. இதில் பயணம் செய்த 22 விமான ஊழியர்கள், 307 பயணிகள் உள்பட 329 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கிய பயங்கரவாதிகள் காரணமென கூறப்பட்டது. இந்த விமான விபத்து நிகழ்ந்த 40-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதில் பலியானவர்களின் உறவினர்கள் சிலர் இந்த நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள நிலையில், வெடிகுண்டு விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மீது விமான குண்டு வெடிப்பு தொடர்பான எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் கனடா தேசிய போலீஸ் தெரிவித்துள்ளது.
English Summary
Air India flight Kanishka bomb suspect identified dies