அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது...! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அகமதாபாத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் இன்று மதியம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மேலும், மேகானி நகர் குடியிருப்பு பகுதியிலுள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் இந்த விமானம் மோதியது. மேலும், அங்கிருந்த 60 பயிற்சி மருத்துவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை.

இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர் என்றும் அதில் 169 பேர் இந்தியர்கள் இன்று தெரிய வந்துள்ளது.அதுமட்டுமின்றி,53 பேர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்வர்கள் என்றும் ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

கூடுதலாக 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர்.இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தற்பொழுது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும், தற்பொழுது கிடைத்த தகவலின்படி 133 ஆக உயர்ந்து என்று தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ahmedabad plane crash Death toll rises to 133


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->