மீண்டும் இரவு நேர ஊரடங்கு.. வெளியான அறிவிப்பு.!
again night lockdown in india
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நாட்டில் முதல் பாதிப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மருத்துவர் உள்பட 2 பேருக்கு கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலத்தில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா - 65, ராஜஸ்தான் - 18, குஜராத் - 14, டெல்லி - 54, கேரளா - 15, கர்நாடகா - 19, ஆந்திரா -1 , தெலுங்கானா - 24, மேற்கு வங்காளம் - 1, ஜம்மு காஷ்மீர் - 3, ஒடிசா - 2, உத்தர பிரதேசம் - 2, தமிழ்நாடு -1 , சண்டிகர் - 1 ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் இந்தியாவில் அதிகபட்சமாக 65 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் நான்கு நாட்களில் ஒமைக்ரான் பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
again night lockdown in india