பெங்களூர்: போதைப் பொருள் விற்பனை செய்த ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் போதைப் பொருள் விற்பனை செய்த ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.அதில் அவரது பையை சோதனை செய்ததில், எம்.டி.எம்.ஏ என்ற போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்த அந்தோணி என்பதும், வேலை தொடர்பாக பெங்களூருக்கு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் கோவாவில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து அதிக விலைக்கு பெங்களூரில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்த 250 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

African man arrested for selling drugs in bangalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->