சென்னை || பாழடைந்த கிணற்றை தூர்வார சென்றவருக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பாழைடைந்த கிணற்றை தூர் வாரிய போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அந்த பகுதியில் உள்ள தீனதயாளு என்பவரின் வீட்டில் பாழடைந்த கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கயிறு மூலம் கிணற்றில் இறங்கி உள்ளார். சிறிது நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் விழுந்துள்ளார்.

 இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கிணற்றில் விழுந்த விஷவாயு தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man Death in Chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->