டெல்லி :: ரூ.90.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லி விமான நிலையத்தில் ரூபாய் 90.27 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் மற்றும் போதை பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக சுங்க அதிகாரிகள் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பயணியை சோதனை செய்ததில், அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூபாய் 90.27 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 760 கிராம் 2 தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்தனர். மேலும் அந்த பயணிடம் அதிகாரிகள் தொடர்ந்து இந்த தங்கம் கடத்தல் சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90 lakhs 27 thousand worth gold seized in Delhi airport


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->