கர்நாடகா : விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு.!
7 year old Boy drowned in well in Karnataka
கர்நாடக மாநிலத்தில் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த நாகபூஷன்(7) என்ற சிறுவன் வழக்கம்போல் நேற்று வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அப்பகுதியில் உள்ள தரைமட்டக்கிணற்றில் சிறுவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளான். இதையடுத்து சிறிது நேரத்திலேயே சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்நிலையில் விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் பெற்றோர் சிறுவனை தேடிச் சென்றனர். ஆனால் சிறுவன் எங்கு தேடியும் கிடைக்காததால், அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் இறங்கி சிறுவனை தேடினர். இதைத்தொடர்ந்து கிணற்றிலிருந்து சிறுவனை பிணமாக கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
7 year old Boy drowned in well in Karnataka