7 மாநிலங்கள்,13 சட்டமன்ற தொகுதிகள்! வாக்குப்பதிவு தொடங்கியது! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம் ஏற்பட்ட காரணத்திற்காக காலியானதாக அறிவிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 18-வது மக்களவை தேர்தலுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பீகாரில் ரூபாலி, மேற்குவங்கம்  ராய்காஞ்ச், ராணிகாஞ்ச், பாக்தாத் மாணிக்த மலா, தமிழ்நாடு விக்கிரவாண்டி, மத்திய பிரதேசம் அமர்வாரா, உத்தரகன் பத்ரிநாத்,மங்களூர், பஞ்சாப் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசம் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்று வருகிறதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 states 13 assembly constituencies Voting has started


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->