#புதுச்சேரி: இளைஞரை ஓட ஒட விரட்டி வெட்டிக் கொலை.. 7 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசம் அரியாங்குப்பம் பெரியார் சிலை அருகே பிரவீன் என்பவரை நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் நான்கு பேர் கொண்ட கும்பல் பிரவீனை துரத்திச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக ஆகாஷ், மனோ, கவி, ஜான், ஷேக், சீனிவாசன், கார்த்தி ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கொலை செய்யப்பட்ட பிரவீன் மீது ஜிம் பாண்டியன் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பழிவாங்கும் வகையில் பிரவீன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் மிக்க பகுதியில் பிரவீன் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 people arrested for hacking a youth to death in Puducherry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->