ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் 55 மணி போராட்டத்துக்குப் பிறகு மீட்பு - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் காளிகாத் கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆர்யன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யன் திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது 150 அடி ஆழமுள்ள கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

சம்பவத்துக்குப் பிறகு மாலை 4 மணிக்கு மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. புல்டோர், டிராக்டர் போன்ற இயந்திரங்களின் உதவியுடன் கிணற்றின் அருகே சுரங்கம் தோண்டப்பட்டது. சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்த குழாய் பயன்படுத்தப்பட்டது. கேமரா மூலம் சிறுவனின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதற்கு முன்னர் உத்தராகண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடை தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டது.

சுமார் 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ஆர்யன் உயிருடன் மீட்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த சிறுவன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா பேசுகையில், ஆழ்துளை கிணறுகளை மூடும் நடவடிக்கைகள் மற்றும் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக நாடு முழுவதும் சட்டமாய் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

தவுசா மாவட்டத்திலேயே கடந்த செப்டம்பரில் 2 வயது சிறுமி 35 அடி ஆழத்திலுள்ள கிணற்றில் விழுந்து 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. இத்தகைய துயர சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 year old boy trapped in borewell in Rajasthan rescued after 55 hour struggle


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->