6 வயது சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு.! வாலிபருக்கு 40 ஆண்டுகள் ஜெயில்.! நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் 6 வயது சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (36). இவர் 6 வயதுடைய சிறுமியை மாடிக்கு அழைத்துச் சென்று கடந்த 2022-ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த உறவுக்கார பெண் ஒருவர் சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது, முஜிபுர் ரஹ்மான் பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் முஜிபுர் ரஹ்மானை கைது செய்தனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு சாலக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முஜிபுர் ரஹ்மானுக்கு 40 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 years in prison for a youth who sexually harassing a 6 year old girl in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->