மதுபானம் குடிக்க வைத்து.. சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில் பூஜியா என்ற பகுதியின் மலையடிவாரத்தில் பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணைக்கு தனது நண்பருடன் 17 வயது சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து. அதன்பின் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயக்கத்தில் கிடந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் போலீசார் கூறுகையில், பண்ணை வீட்டுக்கு தனது நண்பருடன் சிறுமி சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள 4 பேர் அவரை கவனித்து உள்ளனர். பின்பு சிறுமியை பின் தொடர்ந்து சென்று அந்தக் கும்பல் சிறுமியை கட்டாயப்படுத்தி மது பானம் குடிக்க வைத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரை சிறுமிக்கு நினைவு உள்ளது என்றும் அதன்பின் மதுபானம் குடித்த மயக்கமடைந்துள்ளார். மேலும் இந்த வழக்கில் இருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். மற்ற இரண்டு பேரும் இந்த சம்பவத்தின் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கடத்தல், நஞ்சு கொடுத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 boys forced to to drink alcohol and sexual Harrasment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->