ம.பி-யில் பரிதாபம்.! நர்மதா ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தின் ஜஹாஜ்புரா பகுதியில் உள்ள நர்மதா ஆற்றில் மூன்று இளைஞர்கள் நேற்று காலை 10 மணியளவில் குளித்துள்ளனர். அப்பொழுது மூன்று பேரும் எதிர்பாராத விதமாக திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறியும் வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் ஆற்றில் மூழ்கிய மூன்று இளைஞர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்கள் தெவடியா கிராமத்தில் வசிக்கும் சவுரப் நகர் (26), அப்துல்லாகஞ்சில் வசிக்கும் பிரியன்ஷு நகர் (19) மற்றும் எட்டாவாவில் வசிக்கும் ஹர்ஷ் நகர் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 youths drowned narmada river in madhya pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->