கர்நாடகா :: ரூ.27 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.! 3 பேர் கைது - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் காரில் கஞ்சா கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார் ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்திலுள்ள கோனஜே காவல்துறையினர் நெக்கிலபதவு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்து காரில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் காரில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(35), ஹைதர் அலி(30), அகில்(30) என்பதும், அவர்கள் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 person arrested for 27 lakhs worth ganja seized in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->