3 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று.! மருத்துவமனையில் கதறும் பெற்றோர்.!
3 month baby affected by corona
உலகம் முழுதும் இதுவரை 86 லட்சத்து 14 ஆயிரத்து 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 4 லட்சத்து 57ஆயிரத்து 025 பேர் பலியாகி இருக்கின்றனர். அத்துடன், 45 லட்சத்து 62ஆயிரத்து 201 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே வருகின்றது. இந்த நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது புதுச்சேரியில் மூன்று மாத குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று பரவியுள்ளது. அந்த குழந்தை தனது தாயுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளது.
இன்று புதிதாக புதுச்சேரியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 287 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 162 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
3 month baby affected by corona