ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - நோயாளி உள்பட 3 பேர் உயிரிழப்பு
3 killed in ambulance overturned in kerala
கேரளாவில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த சோவனூர் பகுதியை சேர்ந்தவர் பெமீனா. இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இன்று அதிகாலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது, மருத்துவமனைக்கு அதிவேகமாக ஆம்புலன்ஸ் சென்றதால் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சோமனூர் நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்புலன்ஸ்சில் சென்ற பெமீனா மற்றும் அவரது உறவினர்கள் என 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3 killed in ambulance overturned in kerala