ஜம்மு காஷ்மீர்: இரண்டு பேருந்துகள் மோதி விபத்து - 3 பேர் பலி, 17 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ஜம்பு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை நானாகே சாக் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பஞ்சாபின் படாலாவைச் சேர்ந்த மங்கி தேவி (36) மற்றும் அவரது 14 வயது மகள் தனியா மற்றும் ராஜ்புராவைச் சேர்ந்த 58 வயதான கஸ்தூரி லால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த விபத்தில் 17 பேர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதில் 7 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்டம் மருத்துவமனை அதிகாரி வாரத் பூஷன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed 17 injured in bus collided in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->