அடர்ந்த பனிமூட்டம்: உ.பி-யில் லாரி மீது பேருந்து மோதி விபத்து - 18 பேர் காயம் - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இருந்து பயணிகளுடன் பேருந்து ஒன்று பாலியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது குதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவ்வழியாக வந்த லாரி மீது மோதிய விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று குதர் காவல் நிலைய கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 injured in bus lorry collision in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->