உயிரை பறித்த செல்பி மோகம்.. தண்டவாளத்தில் செல்பி எடுத்த மாணவி ரயில் மோதி பலி..!
11th grade student death in train accident tacking selfie
செல்பி எடுத்த மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கருவன்திருத்தியை சேர்ந்தவர் நபாத் (16). இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது சக மாணவர் ஒருவருடன் கோழிக்கோடு பரோக் ரெயில்வே பாலத்தின் மீது ஏறி நின்று ‘செல்பி' எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இதில், நாபாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன் வந்த மாணவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்பி' எடுத்த போது ரெயில் மோதி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
11th grade student death in train accident tacking selfie