காதலனுடன் தனியாக சென்ற இளம்பெண்.. 10 பேர் கொண்ட மர்ம கும்பலின் வெறிச்செயல்.!
10 boys sexual Harrasment for girl in jharkhand
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் தனது காதலனுடன் மாலையில் வெளியே சென்றுள்ளார். தற்போது இவர்களை பின் தொடர்ந்து சென்ற 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் நடுவில் வழி மறித்து காதலனை அடித்து தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர், அந்த இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு 10 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் போன்ற வற்றையும் பரித்து சென்றுள்ளனர். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மிகவும் கஷ்டப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
10 boys sexual Harrasment for girl in jharkhand