அயோத்தி ராமர் கோவிலில் 02-வது பிராண பிரதிஷ்டை விழா: தங்க குவிமாடம் திறப்பு, ராம் தர்பாரில் ஜூன் 05-ஆம் தேதி கும்பாபிஷேகம்..!
02nd Prana Pratishtha ceremony at Ayodhya Ram Temple
அயோத்தியில் ராமர் கோயிலின் முதல் பிராண பிரதிஷ்டை விழா கடந்த வருடம் ஜனவரி 22, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. விழாவில் ராம் லல்லா (குழந்தை ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் தங்க குவிமாடம் (ஷிகாரா) நிறுவப்பட்டு, நாளை (ஜூன் 3) ப்ராண ப்ரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. கோவிலில் நாளை 02-வது ப்ராண ப்ரதிஷ்டை விழாவிற்கு முன்னதாக கர்ப்பகிரஹத்தின் மீது தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம் நிறுவப்பட்டது. இந்த நிகழ்வு கோவில் கட்டுமானத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
-dcuy9.png)
கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ராம் தர்பாரில் ஜூன் 05-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதன் முன்னோடியான தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம் நிறுவுதல் நிகழ்வு இடபெறுள்ளது. தூரத்திலிருந்து பார்த்தால் தெரியும் படியான பளபளப்பான தங்க குவிமாடம் பக்தர்களை கவர்ந்து, கோயிலின் புனிதமான மற்றும் கம்பீரமான சூழ்நிலையை மேலும் மேம்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இக்கோவிலின் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது:
ராமர் கோவிலின் அறக்கட்டளை கோயிலின் சிறப்பை உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், தெய்வீக அழகை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கட்டிடக்கலை அம்சத்தையும் கவனமாக வடிவமைத்துள்ளதாகவும், கருவறைக்கு மேலே உயர்ந்து நிற்கும் தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம், தூய்மை, செழிப்பு மற்றும் பக்தியின் அடையாளமாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-z68zc.png)
நாளை நடைபெறவுள்ள நிகழ்வில், சிவன், விநாயகர், ஹனுமான், சூரியன், பகவதி, அன்னபூர்ணா மற்றும் சேஷாவதர் போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் சடங்குகள் நடைபெறும் என்றும், ஜூன் 03 மற்றும் 04-ஆம் தேதி காலை 06:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை விழாக்கள் நடத்தப்பட்டு, ஜூன் 05-ஆம் தேதி மதியம் 01 மணிக்குள் முடிவடையும் என்றும் அறிவித்துள்ளார்.
அத்துடன், ராமர், லட்சுமணன் மற்றும் சீதா தேவியின் சிலைகள் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டதாகவும், அந்த சிலைகள் கோவிலின் முதல் மாடியில் நிறுவப்படும் என்றும், ஜூன் 05-ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் கோவிலின் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பகுதிகள் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று இக்கோவிலின் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
02nd Prana Pratishtha ceremony at Ayodhya Ram Temple