அச்சத்தில் மக்கள்! கொரோனா தொற்று... உயிர்பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு...!
People fear Corona infection Death toll rises to 32
கடந்த 2019-ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய ''கொரோனா'' தொற்று மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கையாக இருந்த தொற்று, தற்போது 4000 -த்தை நெருங்கிவிட்டது.

இதில் நேற்றைய நிலவரப்படி நாட்டில் 3,961 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறை ,கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளதாகவும்,1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 506 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும், கர்நாடகத்தில் 253 பேரும், தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் 157 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
புதுச்சேரியில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முந்தைய தினத்தைவிட நேற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது.தற்போதைய கொரோனா பரவலில் உயிர்ப்பலி எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 32 ஆக அதிகரித்து உள்ளது.
இதுமட்டுமின்றி, நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
People fear Corona infection Death toll rises to 32