காலையில் எழுந்ததும் தவறாது செய்ய வேண்டிய விஷயங்கள்.!
Health Tips During Wake up Morning
காலையில் தினமும் எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நேர்மறையான எண்ணத்தையும், அமைதியான மனநிலையையும் ஏற்படுத்தும். தற்போது அலைபேசிகள் காலமாக இருப்பதால், இரவில் தூங்க செல்லும் நேரங்களில் இருந்து, காலையில் கண்விழித்ததும் அலைபேசியை பலரும் தேடுகின்றனர்.
காலை நேரங்களில் அலாரம் வைத்து எழுந்துகொள்ளும் நபர்கள், குறைந்தது ஒருமணிநேரமாவது எழுந்ததும் அலைபேசியை உபயோகம் செய்யாமல் ரிப்பது நல்லது. சமூக ஊடகம் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்க இயலாத அங்கமாகிவிட்ட நிலையில், காலையில் எழுந்ததும் முடிந்தளவு அதனை பார்க்காமல் தவிர்த்துவிடலாம்.
காலை வேளைகளில் உங்களுக்காக சில நிமிடங்கள் செலவிட்டால் அது மனதுக்கு பயனளிக்கும். மனதுக்கு பிடித்த இசையை கேட்பது மனதை அமைதிக்கு உள்ளாக்கும், மனதில் இருக்கும் அழுத்தங்களை குறைக்கும்.
பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது என அவசர குளியல் கூடாது. குளிக்க நேரம் ஒதுக்கி பின்பற்றலாம். இதனால் மன அழுத்தம் குறையும். ஒரு நாளில் நடைபெறவேண்டிய நிகழ்வை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யலாம். சுய விழிப்புணர்வு இதனால் அதிகரிக்கும். உடல் நலம் அதிகரிக்கும்.
தினமும் உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் போன்றவை உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும். காலை உணவுகளை கட்டாயம் சாப்பிட்டுவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அதனை தவிர்க்க கூடாது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Health Tips During Wake up Morning