விதைப்பை புற்றுநோயால் பாதிக்கும் ஆண்கள்.. காரணங்கள்., தீர்வுகள் என்ன?..! - Seithipunal
Seithipunal


மனித இனத்தின் சாபக்கேடாக புற்றுநோய் இன்றைய காலங்களில் இருந்து வருகிறது. நமது உடலில் இருந்துகொண்டே உயிருக்கு உலைவைக்கும் பெரும் பிரச்சனையாக புற்றுநோய் பிரச்சனை இருக்கிறது. ஆண்களை பொறுத்த வரையில் எலும்பு புற்றுநோய், இரத்த புற்றுநோய், வாய்வழி புற்றுநோய் போன்ற பட்டியலில் விதைப்பை புற்றுநோயும் (Prostate cancer) ஏற்பட தொடங்கியுள்ளது. 

பொதுவாக விதைப்பை புற்றுநோய் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும். ஆனால், தற்போது 40 வயதிலேயே விதைப்பை புற்றுநோய் ஏற்பட தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நடுத்தர வயது முதல் முதுமை வரை இப்புற்றுநோய் ஏற்படலாம் என்றும், 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவிக்கின்றனர். 

விதைப்பை புற்றுநோய் ஏற்படுவது ஏன்?. 

நம் உடலில் இருக்கும் மரபணுக்கும், விதைப்பை புற்றுநோய்க்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது. அதனைப்போல, முறையற்ற உறவுகளுக்கும் - விதைப்பை புற்றுநோய்க்கும் தொடர்புகள் இல்லை. இப்புற்றுநோய் யாருக்கும், எந்த வயதிலும், எந்த காரணத்திற்காகவும், எப்படி வேண்டும் என்றாலும் ஏற்படலாம். டெஸ்டொஸ்ட்டிரோன் (Testosterone) என்ற ஆண் ஹார்மோன் முக்கிய காரணியாக இருக்கிறது. டெஸ்டொஸ்ட்டிரோன் விதையில் உருவாகி இரத்தத்தில் கலக்கிறது. 

விதைப்பை புற்றுநோயை கண்டறிவது எப்படி?.

எளிதான முறைகளிலேயே விதைப்பை புற்றுநோயை கண்டறிந்துவிடலாம். இந்த புற்றுநோயை கண்டறியும் அறிகுறையை Obstructive Symptoms, Irritating Symptoms என்று இரு வகையாக பிரிப்பார்கள். முதலில் உள்ள Obstructive Symptoms-இல் சிறுநீர் போகாத காரணத்தால் ஏற்படுவது ஆகும். இதுபோன்ற அறிகுறி இருக்கும் நபர்கள், இரவு வேளைகளில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். இரண்டாவதாக உள்ள Irritating Symptoms-இல் எரிச்சல், நமைச்சல் போன்றவை இருக்கும்.

உடலில் சிறுநீர்ப்பைக்கும் - சிறுநீர் வெளியேறும் குழாய்க்கும் நடுவில் விதைப்பை அமைந்துள்ளது. இந்த சிறுநீர் பிராஸ்டேட் சுரப்பியின் வழியாக சென்று பின்னர் வெளியேறுகிறது. விதைப்பை புற்றுநோய் சிறிதுசிறிதாக அதிகரிக்கும் நேரத்தில் சிறுநீர் குழாய் அழுத்தத்திற்கு உள்ளாகும். 

இதனால் சிறுநீர் முழுவதும் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டிய நிலை ஏற்படும். சிறுநீர் கழிக்க அடிக்கடி செல்வது, அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சனை இருக்கும். சிறுநீர் பாதையில் தொற்று, எரிச்சல் போன்றவையும் ஏற்படும்.

விதைப்பை புற்றுநோய்க்கான மக்களின் விழிப்புணர்வு நிலை என்ன?.

விதைப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வரும் நபர்கள் சிறுநீர் பாதை தொற்று அறிகுறிகளுடன் வருபவர்கள், விதைப்பை புற்றுநோய் பரிசோதனைக்கு வருபவர்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். பிராஸ்டேட் சுரப்பி தனித்தன்மை கொண்டது. நமது உடலின் பிற புலன்கள் வேலைப்பாடுகள் குறைந்துகொண்டு செல்கையில், பிராஸ்டேட் சுரப்பி பெரிதாக தொடங்கும். 

PSA என்ற Prostate Specific Antigen இரசாயனம் விதைப்பை சுரப்பியில் சுரக்கும். இரத்தத்தில் PSA இரசாயனமும் இருக்கும். இதன் சராசரி அளவு 4 க்கும் குறைவாகவே இருக்கும். புற்றுநோய் ஒருவரின் உடலிலி பரவ தொடங்கிவிட்டது என்பதை உறுதி செய்ய PSA சோதனை மூலமாக கண்டறிய உதவி செய்யும். 

புற்றுநோய் உடலில் பரவ தொடங்கிவிட்டது என்றால் PSA வின் அளவு அதிகரிக்க தொடங்கும். இதன் அளவு தொடர்ந்து அதிகரித்தால் விதைப்பை புற்றுநோயாக இருக்கலாம். வயது அதிகரிக்க தொடங்கியதும் கண்பார்வை மங்களாகும். செரிமான சக்தி குறையும், எலும்புகள் பலவீனம் அடைய தொடங்கும்.

விதைப்பை கட்டிகள் : 

விதைப்பை சுரப்பியில் ஏற்படக்கூடிய கட்டிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். அதனை Benigan Prostatic Hyperlasia BPH என்று கூறுவார்கள். இரண்டாவது வகையே புற்றுநோய் என்று கூறப்படுகிறது. BPH பிரச்சனையை சிறிய அறுவை சிகிச்சை மூலமாகவே அகற்றிவிடலாம். சிறுநீர் கழிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு, பிராஸ்டேட் சுரப்பியில் பிரச்சனை இல்லையென்றால் புற்றுநோய் இல்லை. 

50 + ஆண்கள் : 

தனிநபர் 50 வயதை கடந்து இருந்தால் உடல் பரிசோதனை செய்வது நல்லது. PSA மதிப்பையும் சோதனை செய்துகொள்வது அவசியம். PSA அதிகமாக இருந்தால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு BPH இருக்கலாம். இன்னும் சிலருக்கு புற்றுநோய் இருக்கலாம். பல்வேறு நிலைகளின் அடிப்படையில் இவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். PSA அளவு 4 இல் இருந்து 10 வரை இருந்தால் BPH அல்லது புற்றுநோயாக இருக்கலாம். PSA அளவு 10 க்கும் மேற்பட்டு இருந்தால் BPH சத்தியம் கிடையாது. புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிசோதனைகள் : 

விதைப்பை புறநோயாளிகளுக்கு DRE என்ற Digital Rectal Examination என்ற பரிசோதனை செய்யப்படும். மருத்துவர் நோயாளியின் விதைப்பை சுரப்பியை பரிசோதனை செய்து, பின்னர் Biopsy என்று அழைக்கப்படும் சதை பரிசோதனை செய்வார். விதைப்பை புற்றுநோய் இருப்பது உறுதியாகும் பட்சத்தில், அதன் வீரியத்தை கண்டறிய Biopsy உதவும்.

விதைப்பையில் புற்றுநோய் அறிகுறி உள்ளதா?. அதனைத்தாண்டியும் உள்ளதா?. இடுப்பு எலும்புக்கு கீழே உள்ளதா?. நெறிகட்டிகள் உள்ளதா?. உடலின் பிற பகுதியில் கட்டிகள் உள்ளதா?. விதைப்பை புற்றுநோய் எலும்புகளில் பரவியுள்ளதா? என்பதை MRI ஸ்கேன் மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து அறியலாம். 

PSMA PET Scan என்பது விதைப்பை புற்றுநோயை கண்டுபிடிக்க தற்போது உதவுகிறது. இதனை தேவையான நோயாளிகளுக்கு உபயோகம் செய்யலாம். 

விதைப்பை புற்றுநோய்க்கான சிகிச்சைகள் : 

பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் PSA அளவு கண்டறியப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல சிகிச்சை வழங்கப்படும். PSA அளவை பொறுத்து Stage 1 மற்றும் 2 என்ற ஆரம்பகட்ட நிலை என்று குறிப்பிடப்படுகிறது. இதில், Stage 3 மற்றும் 4 உடல் முழுவதும் புற்றுநோய் பரவியதை உணர்த்தும். புற்றுநோயின் கட்டத்தை பொறுத்து சிகிச்சைகள் மாறுபடும். நோயாளியின் உடல்நிலையை பொறுத்து உகந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் விரைவில் அதனை குணப்படுத்த முடியும்.

நோயாளிகளுக்கான அறிவுரைகள் : 

ஹார்மோனுக்கான தெரபி தொடங்கிய 3 மாதங்களுக்கு பின்னர் 5 முதல் 6 வாரங்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை செய்யப்படும். விதைப்பை புற்றுநோயை கட்டுப்படுத்த ஊசி மற்றும் மாத்திரைகள் தொடர வேண்டும். Metastatic Prostate Cancer என்பது கட்டுப்படுத்த கூடியது. இதற்காக பிரத்தியேக மாத்திரைகள் உள்ளது. நோய் முற்றியதற்கு பின்னர் மருத்துவரை நாடாமல், முன்னதாகவே நாடுவது நல்லது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Causes and Solution of Prostate Cancer or Vithaipai Pain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->