செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா..! - Seithipunal
Seithipunal


அந்தக் காலங்களில் நமது முன்னோர்கள் செப்பு குடங்களில் தான் தண்ணீரை சேமித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாம் நவீன மயமாகிவிட்டதால் கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று செப்பு பாத்திரங்களை புழக்கத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டன.

செப்பு நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டதால் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதோடு செரிமானம் சீராக நடைபெறவும் துணைபுரியும். புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும். 

மேலும் செப்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் நீரை குடிப்பதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இதில்,

• உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி அமில, கார சமநிலையை பராமரிக்கும்.

• உடல் குளிர்ச்சி அடையும்.

• உணவுகள், சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை செப்பு பாத்திரங்களில் பாதுகாக்கலாம். 

• மேலும் அடிக்கடி காய்ச்சலுக்கு ஆளாகுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். 

• இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படும்.

• உணவு பொருட்களில் பாக்டீரியாக்கள் பெருகுவதை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. 

• மேலும் இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் செப்பு நமக்கு உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of drinking water in a copper vessel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->