தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!!
today school and college leave in madurai district
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் தற்போது மழையின் தாக்கம் குறைந்து உள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். மேலும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீர் தற்போது வடிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தை தொடர்ந்து கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
today school and college leave in madurai district