தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
today 2 district school leave
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடலோர பகுதியில் இடையே வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
today 2 district school leave