தமிழக நியாய விலை கடை பணியிட நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் இணையத்தில் வெளியானது..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிறுத்தப்பட உள்ளது. கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 5,578 விற்பனையாளர்கள் மற்றும் 925 உதவியாளர்கள் உட்பட 6,503 பணியிடங்கள் இருப்பதாக அரசுக்கு தெரியவந்தது.

இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கடந்த 14ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்களுக்கு மொத்தம் 2,29,807 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்டம் வாரியாக ரேஷன் கடை பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Released Ration Shop Job Interview Call letter


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->