குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2,குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 5ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 23) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும்.

ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த தேர்வுகளை இரண்டு வகைகளாக எழுதலாம். தமிழில் எழுத விருப்பமுள்ளவர்கள், தமிழில் 100 கேள்விகளும், பொது அறிவியல் 75 கேள்விகளும்  ஆப்டிடியூட் டெஸ்ட் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 

ஆங்கிலத்தில் எழுத விரும்புபவர்களுக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும்  பொது அறிவியல் 75 கேள்விகள்  ஆப்டிடியூட் டெஸ்ட் 25 கேள்விகளும் கேட்கப்படும்.

இந்தக் கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண் 300 ஆகும். இந்த 300 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் என்று அறிவிக்கப்படும். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Last day to applyTNPSC Group 2 Exam


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->