தனி தேர்வர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தேர்வு எழுத இருக்கும் தனி தேர்வர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் "நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று (டிச.27)  முதல்‌ ஜனவரி 10ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று இணையவழியில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறுபவர்கள் ஜனவரி  11மற்றும்  12 ஆகிய தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 11, 12-ம் வகுப்புக்கு ரூ.1000, பத்தாம்‌ வகுப்புக்கு ரூ.500 தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும்  தகவலுக்கு https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ அறிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important Notice issued by Examination Director for individual candidates


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->