குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில், 5 ஆயிரத்து 413 பணியிடங்கள் இருந்தன. இதற்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. 

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

group 2 and 2A posting vacancis increased


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->