பாதுகாப்பு தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விஷால்!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகின்ற 23ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான ‘பாண்டவர்’ அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர்தாஸ்’ அணியும் போட்டியிடுகின்றனர். 

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என விஷால் நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார், ஆனால் போலீஸ் பாதுகாப்பு தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதுக்கோட்டையில் நடிகர் நாசர், பூச்சி முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது, நடிகர் சங்க கட்டடத்தில் அனைவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம் எனவும் மேலும் நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுக்கிறது, இதற்கு உள்நோக்கம் உள்ளது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட தயாராக உள்ளோம் பாண்டவர் அணி தெரிவித்திருந்திருந்தனர்  

இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishal filed case in high court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->