முக்கிய திரை பிரபலம் மறைவு.. வேதனையில் விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடன இயக்குனராக  பணியாற்றியவர் சிவசங்கர். திருடா திருடி, மகதீரா, பாகுபலி ஆகிய படங்களில் நடன இயக்குநராக பணியாற்றினார். இவருக்கு மகதீரா படத்திற்காகக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு  முன் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவருக்கு  ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரலில் 75 சதவீத தொற்றுடன் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். அவரின் சிகிச்சைக்கு நடிகர் சோனு, தனுஷ் ஆகியோர் உதவ முன்வந்தனர். நேற்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிவசங்கர் உயிரிழந்தார். 

இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திரையுலகில் பல வருடங்களாக நடன இயக்கம் செய்து, சிறந்த டான்ஸ் மாஸ்டர் என்று பெயரெடுத்தவர் திரு. சிவ சங்கர் மாஸ்டர். நான் நடித்த பல படங்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார். மிகவும் அன்பானவர், அனைவருடனும்  பண்பாக பழகுபவர், நடன இயக்கத்திற்காக பல விருதுகளைப் பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth mourns death of dance master sivasankar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->