மகிழ்ச்சியில் இருந்த விஜயகாந்த் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் ரசிகர்களால் கேப்டன் புரட்சிக்கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படுவார். இவர் நடிப்பு மட்டும் என்று இல்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். இவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இவர் தனது ரசிகர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றார். தேமுதிக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

திரைப்படங்களில் நடிப்பதை விடுத்து அரசியல் நிகழ்ச்சிகளில் கூட முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.‌ தற்போது அவரது உடல்நலம் தேறியுள்ள நிலையில் அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியானது. விஜய் மில்டன் இயக்கி விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனால் விஜயகாந்த் ரசிகர்கள் மீண்டும் விஜயகாந்தை திரையில் காண போவதால் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிப்பதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் சினிமாவில் நடிக்கவில்லை. புறநகர் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். கட்சியின் செயல் தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் புதிதாக செயல் தலைவர் பதவியை ஏற்பது குறித்து பொதுக்குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijayakanth did not act in cinema


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->