நீங்கா நினைவுடன் சென்னை திரும்பினார் தொகுப்பாளினி பாவனா.! - Seithipunal
Seithipunal


பிரபல விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பாவனா. இவர் அவ்வப்போது இசை ஆல்பங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போதைய ஐ.பி.எல் சீசனில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். 

கொரோனா தொற்றானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இந்தியாவில் நடக்க வேண்டிய ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதனால் துபாய்க்கு சென்று, அங்கிருந்து பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில், தற்போது பாவனாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோர்களை உடன் இருந்து கவனித்துக்கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுவதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், பெற்றோரின் ஒரே மகளாக நான் அவர்களுடன் சென்னையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த சீசனில் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும், பெற்றோர்களுக்காக எனக்கு பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Television Actress Bhavana Parents test Positive Corona Virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->