ஒருவழியாக தனது திருமணம் குறித்து வாய் திறந்த நடிகை.! முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.!
varalakshmi says about her marriage
தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் மிகவும் முன்னணி நடிகர் ஆவார். இவருக்கு வரலட்சுமி என்ற மக்கள் பிறந்து அவரும் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் என்றால் மிகையாகாது. இவர் சிம்புவுடன் இணைந்து போடா போடி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடித்து இருப்பார். தற்பொழுது காமெர்ஷியல் படங்களை விடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போன்றதொரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றார்.
அந்த வகையில் சர்க்கார் மற்றும் சண்டக்கோழி ஆகிய திரைப்படங்கள் வரலட்சுமிக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த படங்கள் அவருக்கு ஒரு பக்காவான இமேஜை ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது.
தற்பொழுது விமலுடன் இணைந்து கன்னிராசி படத்தில் நடித்தார். இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வரலட்சுமி, தந்து திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், " கன்னிராசி டீம் மிகவும் ஜாலியாக இருந்தது. இந்த படமும் அதுபோலவே நல்ல எனர்ஜியாக இருக்கும். இது காதல் திருமணம் குறித்த படம். ஆனால், நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை." என கூறியுள்ளார்.
English Summary
varalakshmi says about her marriage