இசைஞானி இளையராஜாவை கலங்க வைத்த இயக்குனர் தங்கர்பச்சான்.! வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2002ஆம் ஆண்டு சேரன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சொல்ல மறந்த கதை. இந்த படம் நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விதி என்ற புத்தகத்தின் கதையாகும். இந்த படத்தை இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கினார். 

இந்த படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், நடிகர் சேரன், நடிகை ரதி, ஜனகராஜ், குமரிமுத்து, மணிவண்ணன், பிரமிட் நடராஜன், சத்யப்ரியா, புஷ்பவனம் குப்புசாமி, சதீஷ் மற்றும் யுவராணி ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது தங்கர்பச்சான் நினைவுகூர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில் படத்தில் வரும் அண்ணன் தம்பி சென்டிமென்ட் காட்சியை பதிவிட்டு பலரையும் உறுதி செய்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில்," இருபது ஆண்டுகளுக்கு முன் "சொல்ல மறந்த கதை" திரைப்படத்தின் பின்னணி இசை உருவாக்கி முடித்தப்பின் இறுதியாக சேர்க்கப்பட்ட இக்காட்சியை படத்துடன் இணைப்பதற்காக இசைஞானி இளையராஜா அவர்களிடம் நான் திரையிட்டு காண்பித்த பொழுது அக்கணம் அவருக்குள் உருவான உணர்ச்சிகளை நான் மட்டுமே அறிவேன்! அண்ணன் தம்பி உறவின் மேன்மைக்கு இக்காட்சி ஒரு சான்று!" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangar pachan remembered solla marantha kadhai movie with elayaraja


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->