திரையுலகில் சோகம்: இயக்குனர் சேரனின் தந்தை காலமானார்!
Tamil cinema director serans father passes away
இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரது தந்தை எஸ். பாண்டியன் (வயது 84).
இவர் சினிமா ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் அவரது சொந்த ஊரான மதுரை, மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர் பட்டியில் இருக்கும் அவரது வீட்டில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்த வீட்டில் நடைபெறும். சேரனின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Tamil cinema director serans father passes away