காதல் தோல்வி : விஷால் திரைப்பட நாயகி தூக்கிட்டு தற்கொலை! யார் அந்த காதலன்? அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடிகர் விஷால் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற பவுலின் வசித்து வருகிறார். இவர் துப்பறிவாளன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். 

மேலும், வாய்தா என்ற படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டு காலமாக தனது நண்பர் ஒருவரை பவுலின் காதலித்து வந்த நிலையில், இவருக்கும் இடையே கருது வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் இருவரும் பிரிந்துள்ளனர். காதல் தோல்வியில் மன உளைச்சலில் இருந்த பவுலின் இன்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலிருந்து வந்த போலீசார், பவுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பவுலின் காதல் தோல்வியால்தான் தற்கொலை செய்துகொண்டார்? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா? எனபது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நடிகையின் தற்கொலைக்கு காரணமானதாக சொல்லப்படும் அந்த காதலன் யார் என்பது குறித்து தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள் : 
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தாயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Cinema Actress Deepa Suicide


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->