கார்த்தி குரலில் வெளியான, " ஏறு மயிலேறி" பாடல்.! தீயாக பரவும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கி வருகின்ற இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். கார்த்தியின் சர்தார் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. 

இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம்  கைப்பற்றி இருக்கின்றது. சர்தார் படத்தின் ஓடிடி உரிமை இந்த நிறுவனம், மிகப் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த சர்தார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தியின் குரலில் இந்த பாடல் உருவாகியுள்ள இந்த பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sardhar movie yerumayileri song by karthi voice


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->