'பகையாகி போனா பலியாவ வீணா'.. ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் 3வது பாடல் வைரல்.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தரித்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் காவாலா மற்றும் ஹக்கும் என தொடங்கும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் 3வது பாடலான ஜூஜூபி என தொடங்கும் பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாஸ் வசனங்களுடன் எழுதப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth in Jailor movie 3rd song release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->