பொங்கல் தினத்தில் ரஜினி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! ரசிகர்கள் உற்சாகம்.!
rajini wishes to pongal
தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறோம்.
தைத்திருநாளில் இதுவரை இருந்துவந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று கூட்டாக அறிக்கை விடுத்து, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறி பின்னர், உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்னை ரசிகர்கள் மன்னித்து விடுங்கள் நான் அரசியல் கட்சி துவங்கவில்லை என்று கூறி பின் வாங்கிய ரஜினி தற்போது தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதவியில் அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.