ஆஸ்கார் விருதுக்கு இந்த வருடம் 3 பிரிவுகளில் பரிந்துரைப்பட்ட இந்தியாவின் ஒரே திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம்  ‘ஷியாம் சிங்கா ராய்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில், நடிகர் நானி நடிப்பில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ’ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம். இப்படத்திற்கு மைக்கே ஜே.மேயர் இசையமைத்திருந்தார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தின் ஒருவரி கதை என்றால், "மறுபிறவி எடுக்கும் ஒரு எழுத்தாளனின் கதை". இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, நடனத்திலும் தனி முத்திரை பதித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய சார்பாக சிறந்த காலகட்டத் திரைப்படம் (ப்ரியர்ட் பிலிம்), சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nominated for Oscar Shyam Singh Rai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->