பிரபல இளம் நடிகை மர்ம மரணம்? தீவிர விசாரணையில் போலீசார்!
kerala malayalam actress abarna nayar suicide case
கேரளா : மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அபர்ணா நாயர், அச்சையன்ஸ், கடலு பரஞ்ச கத, மகதீர்த்தம், முத்துகவ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல், சந்தனமழ, ஆத்மசகி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமடைந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரம் அடுத்த கரமனா பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டில் நேற்று இரவு 7.30 மணியளவில் நடிகை அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அம்மாவும், தங்கையும் வீட்டில் இருந்தபோதே நடிகை அபர்ணா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட அபர்ணாவுக்கு 33 வயதாகிறதுக. அவருக்கு சஞ்சித் என்கிற கணவரும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
English Summary
kerala malayalam actress abarna nayar suicide case